Thursday, 13 February 2014

முதியோர் கல்வி

கண்கள் இரண்டும் இருந்தபோது
இமைகளைத் துறப்பதுகூட
எரிச்சலாய் இருந்தது.

கண்கள் புண்களான பின்னர்
உணர்வுகளாலேயே 
உலகத்தைத் தரிசித்து விட வேண்டும்
என்ற உந்துதல்

கடந்தகாலம் என்ற 
கருங்கல்லைச் சுமந்தபடி
எதிர்கால வானத்தில்
ஏற முயற்சித்தால்
படியெல்லாம்
பாசி.

No comments:

Post a Comment