பந்தாக எழுந்தால் பாராட்டுகிறீர்கள் புதைந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள் விதையாக வேர்பிடித்து விருட்சமாக வளர நினைத்தால் மட்டும் வெட்டிவிட எண்ணுகிறீர்களே ஏன்? சில விதைகளுக்கு யுகங்கள் நாட்கள் என்பதாலா?
கண்கள் இரண்டும் இருந்தபோது இமைகளைத் துறப்பதுகூட எரிச்சலாய் இருந்தது. கண்கள் புண்களான பின்னர் உணர்வுகளாலேயே உலகத்தைத் தரிசித்து விட வேண்டும் என்ற உந்துதல் கடந்தகாலம் என்ற கருங்கல்லைச் சுமந்தபடி எதிர்கால வானத்தில் ஏற முயற்சித்தால் படியெல்லாம் பாசி.